Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

மோடி எங்களுக்கு ஏதும் செய்யவில்லை… கண்ணீரை வரவழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்…… வீடியோ…

May 14, 2020
மோடி எங்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர்..  கால்நடையாக நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. அவர்களின் பரிதாபகரமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால்,  அவர்கள் தங்களை சொந்தஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய மாநில அரசுகள் செய்யாத காரணத்தால்,  சமீப நாட்களாக நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவது அதிகரித்து வருகிறது.
ஏராளமானோர் நடந்துச் செல்வதும், சிலர் தங்களிடம் உள்ள சைக்கிள் மற்றும் இருச்சக்கர வாகனங்கள் மூலமும் பல நூறு கிலோ மீட்டர் தூரங்களை பெரும் துயரங்களோ, தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளையும் சுமந்துகொண்டு செல்கின்றனர்…
இவ்வாறு பரிதாபகரமாக செல்லும் மக்கள் மீது பல இடங்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வரும் துர் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. கடந்த வாரத்தில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்த  பரிதாபகரமான சம்பவங்களும் அரங்கேறின.

இன்று தங்களது சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக நடந்துசென்றுகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம், பிபிசி செய்தியாளர் பேட்டி கண்டார். அப்போது அவர்கள் தங்கள் மனக்குமுறலை கொட்டினர்.
மோடி அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
குழந்தைகள் நடக்க முடியாத நிலையில், அவர்களை சைக்கிளின் முன்பகுதியில் வைத்தும், பின்சீட்டில் தங்களது பாத்திர பண்டங்களையும் வைத்துக்கொண்டு குடும்பம் குடும்பமா நடந்து செல்வதை காணும்போது,  அதை காண்போர் கண்களில் கண்ணீர்  வழிந்தோடுவதை தடுக்க முடியாது.
பெரும்பாலான தொழிலாளர்கள் காலில் செருப்பு இன்றி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து செல்வதைக் கண்ட செய்தியாளர் தனது ஷுவை, செருப்பில்லாமல் நடந்துச்சென்ற இளம்பெண்ணுக்கு கொடுத்து உதவினார்.. அந்த பெண்ணும், அவரது ஷுவை பெற்றுக்கொண்டு மீண்டும் தங்களது பயணத்தை தொடரும் காட்சி… பரிதாபகரமானது..
இது நமது இந்தியாவா என கேள்வி கேட்கத் தோணுகிறது…
கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் என்றால் நமது ஆட்சியாளர்களின் தான்தோற்றித்தனம் மற்றொரு புறம்…
இதன் விளைவே இன்று நம் சொந்த நாட்டு மக்களே அனாதையாகவும், ஆதரவற்றவர்களாகவும் மாறிப்போன சூழல் ஏற்பட்டு உள்ளது.

 

Post navigation

மனசாட்சியற்ற எடியூரப்பா அரசு… புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கிய புழுத்த அரிசி – வீடியோ
உத்தரப்பிரதேச அரசு : டில்லி விமான நிலையத்தில் இருந்து நொய்டாவுக்கு ரூ.10000 டாக்சி கட்டணம் – மக்கள் அவதி

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer