மும்பை: அடுத்தாண்டில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்காக, இந்திய அணியில் இடம்பெறும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும் சுரேஷ் ரெய்னா, டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் என்ற பெயரைக் கொண்டவர். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி-20 தொடரில் இவர் இடம்பெறவில்லை.

கடைசியாக, கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக இவர் ஆடினார். அதன்பிறகு தேசிய அணியில் வாய்ப்பு பெறவில்லை.

இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “நான் இந்திய அணிக்காக நான்காம் இடத்தில் களமிறங்க முடியும். நான் அந்த இடத்தில் ஏற்கனவே களமிறங்கி நன்றாக செயல்பட்டுள்ளேன். எனவே, எனக்காக வாய்ப்பை எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, நான்காம் இடம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கல் மிக்கதாகவே இருந்து வருகிறது. அந்த இடத்திற்கு இப்போதுவரை சிறப்பாக விளையாடும் வீரர் கிடைக்கவேயில்லை என்ற நிலையில், அந்த இடத்‍தை சுரேஷ் ரெய்னா குறிவைத்துள்ளார்.