மாஸ்கோ: ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து சாலையில் தஞ்சம் புகுந்தனர்.
ரஷியாவின் கம்சட்கா பகுதியில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத் தால் கட்டடங்கள் அதிர்ந்தன. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, காம்சட்கா தீபகற்பத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கிக்கு கிழக்கே 128 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில், 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அ

மெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ரஷியாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.