சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறருது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.78,440–ஐ கடந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதுடன், தங்கத்தில் முதலீடும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஆக.8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760 என்ற உச்சத்தை அடைந்தது. தொடர்ந்து ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த ஆண்டு இறுதி வாரம் முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
2025 ஆகஸ்டு 29ந்தேதி அன்று இந்திய வரலாற்றில் முதல்முறையாக தி தங்கம் பவுன் விலை ரூ.76 ஆயிரத்தை கடந்து நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றுமுதல் இன்றுவரை உயர்ந்துகொண்டே வரும் தங்கத்தின் விலையானது, செப்டம்பர் 1-ம் தேதி மேலும், அதிகரித்து பவுன் ரூ.77 ஆயிரத்தை முதல்முறையாக எட்டியது.
இந்த நிலையில் இன்று (செப்.3) தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,805-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் வெகு விரைவில் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது.