டெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50சதவிகிதம் வரியை உயர்த்திய அமெரிக்க அதிபர், இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளார். இந்திய மருந்துபொருட்களின் தேவை அமெரிக்காவுக்கு இன்றியமையாதது என்ற நிலையில், மருந்து பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளார்.
இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்திய மருத்துவத்துறை முன்பு அடிபணிந்து வரிவிலக்கு அளித்துள்ளார்.

இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ள அமெரிக்கா, இந்திய மருந்துகளுக்கு மட்டும் உடனடி சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் மலிவான சுகாதாரச் சேவைகளை வழங்கும், முக்கிய generic medicine எனப்படும் பொதுமருந்துகள் கிடைப்பது பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் 25 சதவீத வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒருபுறம், டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் சரணடைந்துள்ளார். மருந்துகளின் இறக்குமதியில் அவர் இந்த வரியை அமல்படுத்தவில்லை. இதற்கு ஒரு காரணம் உள்ளது. அமெரிக்காவில் மலிவான சுகாதார சேவைகளை வழங்குவதில் இந்திய மருந்துகள் மிகவும் உதவியாக உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் பொதுவான மருந்துகளின் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, மருந்துகளை வரியிலிருந்து விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்புக்கு பொதுவான மருந்துகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய மருந்துத் துறைக்கு உடனடி வரி உயர்விலிருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. பிற இறக்குமதிகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா மருந்துகளுக்கு இந்தியாவை பெரிதும் சார்ந்துள்ளது, இது சுகாதாரச் செலவுகளில் சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொதுமருந்துகள் அமெரிக்கச் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால், இந்திய மருந்துகள் அமெரிக்க MEDI CARE திட்டத்திற்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. அவற்றுக்குச் சுங்க வரி விதிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க மருத்துவ சேவைகளின் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டு, அமெரிக்கா அதிக அளவில் மருந்துகள் இறக்குமதி இந்தியாவில் இருந்து செய்கிறது. கடந்ரத ஆண்டு, இந்தியாவிலிருந்து அமெரிக்கா 12 ஆயிரத்து 471 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்துள்ளது. இது அந்நாட்டின் மருந்து இறக்குமதியில் 5.9 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு இது 11.9 சதவீத வளர்ச்சி எனப் புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன.
அதே நேரத்தில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்திலிருந்து 18ஆயிரத்து 858 மில்லியன் டாலர், ஜெர்மனியிலிருந்து 17 ஆயிரத்து 164 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இறக்குமதி செய்திருந்தது.
இந்தியா தனது மருந்துகளை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக நடப்பாண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 9 ஆயிரத்து 784 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மருந்து இருப்பில் 39.8 சதவீதம் ஆகும்.
அதேபோல, இங்கிலாந்திற்கு 781 மில்லியன் டாலருக்கும், தென் ஆப்ரிக்காவிற்கு 637 மில்லியன் டாலருக்கும், பிரான்ஸுக்கு 586மில்லியன் டாலருக்கும், கனடாவிற்கு 540 மில்லியன் டாலருக்கும் இந்தியா மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய மருந்துகளின் முக்கியத்துவத்தையும், அமெரிக்கா அதனை எந்த அளவிற்கு நம்பியுள்ளது என்பதையும் எடுத்துரைக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்கா வழங்கிய சுங்க வரி விலக்கு காரணமாக, முக்கிய இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் குறிப்பிடத்தக்கப் பங்குகளை பாதுகாக்க முடிந்துள்ளது.
ஒருவேளைப் பொது மருந்துகளுக்கும் சுங்கம் விதிக்கப்பட்டிருந்தால், மருந்து நிறுவனங்களிடையே விலைப் போட்டி அதிகரித்து, சந்தையில் போட்டித்திறன் குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மருந்துக் கூட்டணியின் பொதுச் செயலர் சுதர்சன் ஜெயின், அமெரிக்காவில் மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பை பராமரிப்ப தற்கு பொதுவான மருந்துகள் “முக்கியமானவை” என்பதால், அமெரிக்காவின் உடனடி கட்டண அமலாக்கத்தில் இருந்து இந்திய மருந்துத் துறை “ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்தத் துறை தற்போது பிரிவு 232 இன் கீழ் விசாரணையின் கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பிற்கு ஜெனரிக் மருந்துகள் மிகவும் முக்கியமானவை, மேலும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் மிகக் குறைந்த லாபத்தில் கிடைக்கும் பங்கு சுமார் 6 சதவீதம் ஆகும். இதன் காரணமாக அமெரிக்க மருத்துவக் காப்பீட்டு அமைப்பு இந்தியாவை கணிசமாகச் சார்ந்துள்ளது.
ஆகஸ்ட் 27, 2025 அன்று 50 சதவீத வரி விதிக்கப்பட்ட பிறகு, இந்திய மருந்து ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதிகளை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றத் தொடங்கினர், இது அமெரிக்க மருத்துவக் காப்பீட்டு அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2025 நிதியாண்டில் இந்தியா அதன் மொத்த மருந்து ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதத்தை ஏற்றுமதி செய்திருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய மருந்துகளை 50 சதவீத வரியிலிருந்து விலக்கி வைத்ததற்கு இதுவே காரணம் என்று தெரிவித்துள்ளார்.