சென்னை: ரூ.118 கோடியில் சென்னை  ரயில்பெட்டி தொழிற்சாலையில்  (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும்  ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’,  சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த ரயில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதுடன், 10 பெட்டிகளுடன்  மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய சோதனைக்குப் பிறகு இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் ரயில் தொடங்கப்பட உள்ளது –  அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டது
சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF), 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கியது.  அந்த பணிகள் முடிந்து, ரயில் சோதனை ஓட்டத்துக்காக வடமாநிலத்துக்கு செல்ல உள்ளது.
இந்த ரயில் ஏற்கனவே  சென்னையின் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்)  வெற்றிகரமான சோதனை நடத்திய நிலையில்,அடுத்த கட்ட சோதனைக்காக டெல்லி செல்ல உள்ளது. இந்த சோதனை முடிந்த பிறகு,  , இந்திய ரயில்வே தனது முதல் ₹136 கோடி மதிப்பிலான ஹைட்ரஜன் இயங்கும் ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது .
உலகின் மிக சக்திவாய்ந்த இந்த  ஹைட்ரஜன் ரயில் ஜிந்த்-சோனிபட் பாதையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளத. , இது பூஜ்ஜிய உமிழ்வு ரயில் பயணத்தை நோக்கிய ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இந்த தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம், சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட இந்த ரயில், தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று, அடுத்தகட்ட சோதனைக்காக விரைவில் டெல்லிக்கு அனுப்பப்பட இருக்கிறது.

ஹைட்ரஜ்ன்  ரயிலின் சிறப்பம்சங்கள்:

சுஹைட்ரஜன் மூலம் இயங்குவதால், இந்த ரயிலில் இருந்து எந்தவிதமான புகையும் வெளியேறாது. இது கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும். மின்சாரத்தில் இயக்கும் ரயிலை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது.

இந்த ரயில், சுமார் ரூ.118 கோடி மதிப்பீட்டில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 84 பயணிகள் வரை பயணிக்கலாம்.  இந்த ரயில் என்ஜின், 1,200 குதிரைத் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

வசதிகள்:

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.

ஹைட்ரஜன் ரயில், வடக்கு ரயில்வேயிடம் விரைவில் ஒப்படைக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஹரியானா மாநிலத்தின் சோனிபேட் – ஜிந்த் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக, 50 முதல் 80 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இந்திய ரயில்வேயின் இந்த புதிய முயற்சி, எதிர்காலத்தில் பசுமையான மற்றும் நீடித்த ரயில் போக்குவரத்துக்கு வழிவகுக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.