பாலஸ்தீன பகுதியான காசா நகரத்தை இராணுவமயமாக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போர் மண்டலங்களுக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதோடு, காசா நகரத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கட்டுப்பாட்டில் எடுக்கத் தயாராகி வருவதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 22 மாதங்களாக ஹமாஸால் பிடித்துவைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்ரேல் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

இதன் மூலம்,

1. ஹமாஸை நிராயுதபாணியாக்குவது

2. பணயக்கைதிகளை விடுவிப்பது

3. காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு

4. காசாவை ராணுவமயமாக்குவது, மற்றும்

5. ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகாரசபை அல்லாத ஒரு சிவில் நிர்வாகத்தை நிறுவுவது

ஆகிய ஐந்து திட்டங்களை இஸ்ரேல் செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.