பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

2022 தேர்தலை ரத்து செய்ய முயன்றதாக போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது, இந்த தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்று அதிபராக உள்ளார்.

தேர்தல் முடிவை ஏற்க மறுத்த போல்சனாரோ கலவரத்தை தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் போல்சனாரோ சமூக ஊடக பயன்பாடு மற்றும் அரசியல் செய்திகளை கட்டுப்படுத்தும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையை மீறி செயல்பட்டதாகக் கூறி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போல்சனாரோவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் போல்சனாரோ மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கில் போல்சனாரோவுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகக் கூறி அவரை வீட்டுக்காவலில் வைக்க நீதிபதி மோரேஸ் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.