உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது நேற்றிரவு ரஷ்யா கிளைடு குண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் உக்ரேனிய சிறைச்சாலை மற்றும் ஒரு மருத்துவ மையத்தைத் தாக்கி குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

உக்ரைனின் தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 17 கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டினிப்ரோ பகுதியில், குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 50 நாட்கள் கெடு விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்னும் 10 நாட்களில் போரை நிறுத்தவேண்டும் என்று நேற்றிரவு அதிபர் புடினுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதை அடுத்து உலகில் நிற்காமல் தொடரும் எந்தவொரு போரையும் நிறுத்தும் வல்லமை படைத்திருந்தும் உக்ரைன் மீதான போரை நிறுத்தாமல் தொடரும் ரஷ்யா தனக்கு தலைவலியாக உள்ளதாக நேற்று ஸ்காட்லாந்தில் பேசிய டிரம்ப் தெரிவித்துள்ளார்.