கொழும்பு: இலங்கை அரசாங்கம் இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்தவர்களுக்க 30 நாட்கள் விசா இன்றி வரலாம் என அறிவித்து உள்ளது.
இலங்கை அரசாங்கம், நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகை கூட்டவும் முடிவு செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கான விசா கட்டணத்தை விலக்கு அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை இலங்கை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் 2025 ஜூலை 25 முதல் நடைமுறையில் வந்துள்ளது.

விசா கட்டண விலக்கு வழங்கப்பட்ட நாடுகள்:
1. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியம்
2. ஜெர்மனி கூட்டாட்சி குடியரசு
3. நெதர்லாந்து இராச்சியம்
4. பெல்ஜியம் இராச்சியம்
5. ஸ்பெயின் இராச்சியம்
6. ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த்
7. போலந்து குடியரசு
8. கஜகஸ்தான் குடியரசு
9. சவுதி அரேபியா இராச்சியம்
10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
11. நேபாள கூட்டாட்சி ஜனநாயக குடியரசு
12. சீன மக்கள் குடியரசு
13. இந்திய குடியரசு
14. இந்தோனேசியா குடியரசு
15. ரஷ்ய கூட்டமைப்பு
16. தாய்லாந்து இராச்சியம்
17. மலாயா கூட்டமைப்பு
18. ஜப்பான்
19. பிரான்ஸ் குடியரசு
20. அமெரிக்கா
21. கனடா
22. செக் குடியரசு (செக்கியா)
23. இத்தாலி குடியரசு
24. சுவிஸ் கூட்டமைப்பு (சுவிட்சர்லாந்து)
25. ஆஸ்திரியா குடியரசு
26. இஸ்ரேல் குடியரசு
27. பெலாரஸ் குடியரசு
28. ஈரான் இஸ்லாமிய குடியரசு
29. ஸ்வீடன் இராச்சியம்
30. பின்லாந்து குடியரசு
31. டென்மார்க் இராச்சியம்
32. குடியரசு கொரியா
33. கத்தார் மாநிலம்
34. ஓமன் சுல்தானகம்
35. பஹ்ரைன் இராச்சியம்
36. நியூசிலாந்து
37. குவைத் மாநிலம்
38. நோர்வே இராச்சியம்
39. துருக்கிய குடியரசு
40. பாகிஸ்தான்
இந்த 40 நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை அரசு 30 நாட்கள் வரை விசா கட்டண விலக்கை வழங்குகிறது. இது ஒரு சோதனை திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.