குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12ம் தேதி நடைபெற விமான விபத்தில் 260 பேர் பலியானார்கள்.
இதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்த நிலையில் அதிலிருந்த வெளிநாட்டு பயணிகளின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த உடல்கள் உள்ளிட்ட அனைவரின் உடல்களும் டி.என்.ஏ. சோதனைக்குப் பிறகு பல நாட்கள் கழித்தே ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களின் ‘தவறான உடல்களை’ அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இறந்தவர்களின் உடலை அடையாளம் காண வழங்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.”
“இந்த சந்தேகம் தொடர்பாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இங்கிலாந்து அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.