டெல்லி: கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதானதி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 2ந்தேதி பிரதமர் மோடி 5 நாள் பயணமாக  5 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்படி, கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, பிரேசில் மற்​றும் நமீபியா என ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இநத் பயணத்தின் முதல் நாடானா ஆப்பிரிக்க தேசமான கானாவை  சென்றடைந்தார்.  அங்கு  பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   மோடியை, கானா  அதிபர் ஜான் டிராமணி மஹாமா, விமான நிலையம் சென்று வரவேற்றனர். மேலும் வரும் வழியில்,  கானா மக்கள் மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தில் கானா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

 பிரதமர் மோடி கானாவில் வசித்து வரும் புலம்பெயர் இந்திய மக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பரதநாட்டிய கலைஞர்கள் சிலர் பரதம் ஆடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடி கானாவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.  கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (The Officer of the Order of the Star of Ghana) விருதை அந்நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் மோடிக்கு அணிவித்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ”தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கௌரவம் இந்தியாவுக்கும் கானாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இந்த கௌரவம் இந்தியா – கானா இடையே வலுவான நட்பை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்படுத்துகிறது.  இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணைநிற்கும், நம்பகமான நட்பு நாடாக தொடர்ந்து பங்களிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை. தொடர்ந்து, டிரினிடாட், டொபாகோ, ஆர்ஜென்டீனா மற்றும் பிரேசில் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.