டெல்லி
நாளை இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்பயணம் மேற்கொள்வதாக நாசா அறிவித்துள்ளது.’

பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்த நிலையில் பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 22-ம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.
ஆக்சியம் 4 திட்டம் நாளை (ஜூன் 25) செயல்படுத்தப்படும் என நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நாளை (ஜூன்25) இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் செல்கின்றனர்.