ஐதராபாத்

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபல் சுசாட்டா பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை விருப்பம் தெரிவித்துள்ளார்/

ஐதராபாத்தில் 72-வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி கடந்த மே 10-ந்தேதி தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். இறுதிச்சுற்று போட்டிக்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர்.

இறுதி சுற்றில், தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா வெற்றி பெற்றார். அவருக்கு, கடந்த ஆண்டு போட்டியில் கலந்து கொண்டு 71-வது மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் சூட்டினார்.

உலக அழகி பட்டம் வென்ற0 தாய்லாந்து அழகி ஓப; செய்தியாளர்களிடம்,

“நான் அதிக மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன். தாய்லாந்துக்கான முதல் உலக அழகி கிரீடம் பெற்று தந்திருப்பது கவுரவம் அளிக்கிறது.

அவர்களை பெருமையடைய செய்திருக்கிறேன் என நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், பாலிவுட் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். அது ஆச்சரியமளிக்கும் வாய்ப்பாக இருக்கும்”

என்று கூறியுள்ளார்.