பெங்களூரு
பெங்களூரு மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்ப்பட்டுள்ளது.’’

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரயிலில் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுக்கக்கூடாது. உணவு சாப்பிடக்கூடாது. மதுபானங்கள், பீடி, சிகரெட், புகையிலைப் பொருட்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இவற்றை மீறுபவர்கள் மீது பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் (பி.எம்.ஆர்.சி.எல்) அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 26-ந் தேதி மாதவராவில் இருந்து மாகடி ரோட்டுக்கு வந்த மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவர், உணவு சாப்பிட்டுள்ளார்.
பயணி ஒருவர் இதை செல்போனில் வீடியோ எடுத்து மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தொடர்பான சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் அந்த பெண்ணை அடையாளம் கண்டு, அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.