கொல்கத்தா

திடீர் நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மேற்கு வங்காள மாநில ஆளுநராக சிவி ஆனந்த் போஸ்  பதவி வகித்து வருகிறார்.0 இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது., உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மருத்துவர்கள் உரிய பரிசோதனைகளுக்கு பின்னர், அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் உடல்நிலை பற்றிய தகவலறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.ஆளுநரின் உடல் நிலை குறித்து தற்போது வரை கவர்னர் மாளிகை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.