பிடதி
கர்நாடகாவில் உள்ள ஒரு தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்ப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சென்ற 14-ந் தேதி இரவு தொழிற்சாலை கழிவறையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது டன் கன்னட மொழி குறித்து இழிவாகவும் எழுதப்பட்டிருந்தது.
தொழிற்சாலை நிர்வாகிகள் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே நேற்று இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கன்னட அமைப்பினர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இதில் தொடர்புடையவர்கள் மீது தொழிற்சாலை நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அந்த ஒப்புதலையொட்டி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]