2025ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குவதை அடுத்து அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்பு பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியில் விளையாடும்போது ராகுல் டிராவிட்டின் இடது காலில் காயம் ஏற்பட்டது. டிராவிட் பயிற்சிப் போட்டியில் பங்கேற்பது கடினமாக இருக்கும் என்று அப்போது கூறப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது இடது காலில் காயத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் பயிற்சி முகாமுக்கு வந்து அணியுடன் இணைந்துள்ளார்.

டிராவிட் ஊன்றுகோல் பிடித்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழையும் வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் பகிர்ந்துள்ளது. “எங்கள் தலைமை பயிற்சியாளர் பெங்களூரில் நடந்த ஒரு போட்டியில் விளையாடும்போது காலில் காயம் அடைந்து இப்போது குணமடைந்து வருகிறார்” என்று அதில் கூறியுள்ளனர்.

காலில் காயம் இருந்தபோதிலும் டிராவிட் சுறுசுறுப்பாக இருப்பதை வீடியோவில் காணலாம். அவர் பேட்டரியில் இயங்கும் காரில் மைதானத்திற்கு வந்து வீரர்களுடன் கைகுலுக்கினார். அவர் இளம் வீரர்களான ரியான் பராக் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது ஊன்றுகோலில் இருந்த டிராவிட், நாள் முழுவதும் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்தார்.