தராபாத்

மிழகத்தை போல்  தெலுங்கானவிலும் தொகுதி சீரமைப்பை எதிர் த்டு அனைத்துக்  கட்சி கூட்டம்  நடைபெற உள்ளது/

தெலுஞ்கானா அர்சுக்கும் மத்திய அரசுக்கும், இடையே தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் அரசு பிரஜா பவனில் மாநில எம்.பி.க்களின் அனைத்துக் கட்சிக் கூட்டம் காலை 11 மணிக்கு துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெறுகிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

நேற்று தொகுதிகளை மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான திட்டத்திற்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் அபாயம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு, இந்தி மொழி சர்ச்சை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பி.சி.க்களுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு மற்றும் சட்டமன்றம் நிறைவேற்றியவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய எஸ்.சி. வகைப்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.