சென்னை
தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் அறிவித்துள்ளது/

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.
”பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, திருச்செந்தூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-20606) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து 9-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் ரயில் (20666) மாம்பலம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து 9-ந்தேதி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி குருவாயூர் செல்லும் ரயில் (16127) எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து 9-ந்தேதி திருச்செந்தூர் செல்லும் ரயில் (20605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது.