புவனேஷ்வர்
அரசு பள்ளிகள் அனைத்தும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என ஒடிசா அர்சு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் நட்ந்த ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டடங்களுக்கும் புதிய வண்ணக் குறியீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா பள்ளி கல்வித் திட்ட ஆணையம், இதுகுறித்த உதாரண படத்துடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில்ல், பி.எம். ஸ்ரீ உள்பட அனைத்து பள்ளிகளின் கட்டடங்களின் நிறத்தை ஆரஞ்ச் மற்றும் பழுப்பு நிறத்துடன் கூடிய ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது கட்டுமானம், பழுதுபார்ப்பு, புதுப்பித்தல் பணிகளின்போது அங்கீகரிக்கப்பட்ட வண்ணக் குறியீட்டை ஏற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட களப் பணியாளர்களுக்கு பொறுத்தமான வழிமுறைகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்ற அக்டோபரில், மாநில பாஜக அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் சீருடை நிறத்தையும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஆட்சியின் (நவீன் பட்நாயக் ஆட்சி) பச்சை வர்ணம் நீக்கப்பட்டு காவி நிறத்தில் பள்ளிகள் மாற உள்ளன. ஒடிசாவை ஆளும் பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என பிஜு ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.