திருச்சி

பிரபல  கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை  முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் நந்தலாலா (வயது 69). உடல்நலக்குறைவால் பெங்களூருவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் ஆம்புலன்சில் திருச்சி கருமண்டபத்தில் உள்ள உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் இது குறித்து எக்ஸ் தளத்தில்,

தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகவும், தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலைசிறந்த கவிஞர் – பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா உடல்நலக்குறைவால் மறைவுற்ற நிலையில், திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று நந்தலாலாவின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது பெரும் பற்று கொண்டவர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மதிப்பும் – மரியாதையும் கொண்ட பண்பாளர். திரு.நந்தலாலா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், த.மு.எ.க.ச தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம். கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்தாலும், அவரது பணிகள் என்றும் நிலைத்திருக்கும்”

எனப் பதிவிட்டுள்ளார்.