பிரயாக்ராஜ்
நேற்று முதல் 15 நாட்களுக்கு மகாகும்பமேளா நடந்த பிரயாக் ராஜ் நகரில் சிறப்பு தூய்மை பணி நடந்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கிய 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 26-ந்தேதி நிறைவடைந்தது/. இதையொட்டி , அந்த இடத்தில்15 நாட்கள் சிறப்பு தூய்மைப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மகா கும்பமேளா விழா முடிவடைந்ததும், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்களின் சேவையை பாராட்டி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்களை கவுரவித்தார். மேலும் கும்பமேளா மைதானம் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தூய்மை பணி சிறப்பு அதிகாரி அகன்ஷா ராணா தலைமையில் நடைபெற்று வருகிறது. அடுத்த 15 நாட்களில் நதிக்கரையில் உள்ள படித்துறைகள், மகா கும்பமேளா மைதான சாலைகள், நிரந்தர மற்றும் தற்காலிக உள்கட்டமைப்புகள் சுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.