ஸ்லாமாபாத்

ன்று அதிகாலை பாகிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது//

ஏற்கனவே கடந்த மாதம் 3ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

இந்நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.