டெல்லி

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

நாடாளுமன்ற செய்தி குறிப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவித்ததன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர் ஆனது ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கும். பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி கூட்டத்தொடர் முடிவடையும்.

அடுதத அதாவது 2 ஆவது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவடையும்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனவரி 31 ஆம் தேதி உரையாற் உள்ளார். இதற்கான கூட்டம்  நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம் நடைபெறுகிறது .

ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் பிப்ரவரி 3-ந்தேதி, 4-ந்தேதி மற்றும் 6-ந்தேதி நடைபெறும். அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார்.