பிரயாக்ராஜ்

துவரை மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 8.81 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

கடந்த 13 ஆஅம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.  மகாகும்பமேளாவையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 8.81 கோடி பேர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.  இதில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இம்முஏஈ மகா கும்பமேளாவுக்கு சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.