பால்கர்
இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/

கடந்த சில நாட்களாகஇந்தியாவின் வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இவற்றால் பாதிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த வரிசையில் இன்று அதிகாலை சுமார் 4.15 மணி அளவில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel