பாரமுல்லா
நேற்றிரவு காஷ்மீரில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு சுமார் 9.06 மணி அளவில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது.
இது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவு தெரிவிக்கின்றது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
Patrikai.com official YouTube Channel