மும்பை

ன்று மகாராஷ்டிர முதல்வர் எக்நாத் ஷிண்டே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த மாதம் 20 ஆம் தேதி 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் ஆளும்  எதிர்க்கட்சி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

அங்கு பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கான நாளை கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வரிம், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.அப்போது அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் உத்தவ் சிவசேனா கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே போட்டியிட உள்ளார்.’