சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மலை 6 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று முதல் வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இன்று மாலை 6 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது