கோவை

கோவையில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிக அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வந்தபோது, பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது.

உடனடியாக இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அனைத்து பயணிகளும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதை அடுத்து பேருந்து மேலும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.