சென்னை

தெற்கு ரயில்வே டானா புயலையொட்டி ராமேஸ்வரம் – புவனேஸ்வர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்துள்ளது.

நேற்று வங்கக்கடலில் உருவான ‘டானா’ புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ரயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ரயில்களும், வெளிமாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்கள் செல்லும் ரயில்களும் என 30 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

தற்போது கூடுதலாக 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.

”ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12830) நாளை (24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12829) 27-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.’

என்று கூறப்பட்டுள்ளது.