பெரிய தாழை

னது வாகனத்தை வழிமறித்து கோரிக்கை வைத்த சிறுவர்களுக்கு கனிமொழி எம் பி உடனடியாக உதவி வழங்கி உள்ளார்.

இரண்டாவது முறையாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அதனபடி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியதாழை ஊராட்சிக்கு சென்று கொண்டு இருந்தபோது, கனிமொழியின் வாகனத்தை சிறுவர்கள் சிலர் இடைமறித்துள்ளனர்  உடனடியாக வாகனத்தை நிறுத்திய கனிமொழி, அவர்களுடன் அன்போடு உரையாடினார்.

அந்த சிறுவர்கள் தங்களுக்கு கைப்பந்து வேண்டுமென உரிமையோடு கனிமொழியிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களை பெரியதாழை ஊராட்சியில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று கைப்பந்துகள், கைப்பந்து வலைகள் மற்றும் உபகரங்களை வாங்கி கொடுத்து வாழ்த்தி அனுப்பியுள்ளார்.