மும்பை

விரைவில் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் பாஜக, காங்கிரஸ், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த. முதற்கட்ட பட்டியலில் மொத்தம் 45 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.