டெல்லி

கெஜ்ரிவால் அவதூறு வழக்கில் சம்மனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அப்போதைய டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து விமர்சித்து பேசியிருந்தார். குஜராத் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது.

விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்காக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட  சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் குஜாரத் ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்து கெஜ்ரிவாலின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சஞ்சய் சிங் இதேவழக்கில் தனியாக தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே உசநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் ஒரே மாதிரியான அணுகுமுறையை நாங்கள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.