நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குருபத்வந் சிங் பன்னு மிரட்டல் விடுத்துள்ளார்.

1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவர தேதியை ஒட்டி விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் காரணமாக ஏர் இந்தியா விமானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற மிரட்டலைகளை இந்த அமைப்பு விடுத்துள்ளபோதும் கடந்த சில நாட்களாக சுமார் 100 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கும் நிலையில் சீக்கிய பிரிவினைவாதிகன் இந்த மிரட்டல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், அமெரிக்க மற்றும் கனடா ஆகிய இரு நாட்டு குடியுரிமை பெற்ற குருபத்வந் சிங் பன்னு-வை கடந்த ஆண்டு இந்திய உளவு அதிகாரி அமெரிக்க மண்ணில் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படும் நிலையில் பன்னுவின் இந்த மிரட்டல் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு