துலே

மாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் இந்திய அரசியலை மகாராஷ்டிர  தேர்தல் முடிவுகள் மாற்றும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் 2-வது பெரிய சட்டப்பேரவையான மகாராஷ்டிர சட்டசபைக்கு (288 தொகுதிகள்) தேர்தல் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறுகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சித்தலைவரும், உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் துலே தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் இர்ஷாத் ஜஹாகிர்தார் என்பவரை அறிவித்தார்.

அகிலேஷ் யாதவ் அப்போது,

”மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக கட்சிகளை பிளவுபடுத்தி ஆட்சியை திருடுகிறது. இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் அரசியலை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையும் மாற்றும். இது ஒரு வரலாற்றுத்தேர்தல். மராட்டிய தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநிலத்தில் பாஜக அரசு வீட்டுக்கு செல்லும்போது, மத்தியிலும் பாஜக கூட்டணி அரசு கவிழும்.

இப்போது புல்டோசரை தன்னுடன் எடுத்துச்செல்லும் எங்கள் முதல்வர் (உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்) அப்போது வீட்டுக்கு செல்வார். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை மாற்றும் வகையில், மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தோல்வியை வாக்காளர்கள் உறுதி செய்யவேண்டும்.”

என்று அவர் கூறி உள்ளார்.