டெல்லி

ன்று விஸ்தாரா நிறுவனத்தின் 6 வ்மானங்கள் உள்ளிட்ட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக ஏர் இந்தியா மற்றும் பிற உள்ளூர் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு எண்ணற்ற வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வருகின்றன.  தினசரி விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அதிகரித்து வருகின்றன.

அவ்வகையில் நேற்று 32 விமானங்களுக்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன,

இன்று டெல்லி – பிராங்பேர்ட், சிங்கப்பூர் – மும்பை, பாலி – டெல்லி, சிங்கப்பூர் – புனே மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் புனே – ஜோத்பூர், கோவா – அகமதாபாத், கோழிக்கோடு – சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இத்தகைய வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.