சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

”காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று அத்காலை சென்னையில் பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அமைந்தகரை, சென்ட்ரல், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. 

இன்று காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது

அதாவது திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது”

என்று தெரிவித்துள்ளது.