ராஞ்சி

ந்தியா கூட்டணி ஜார்க்கண்ட்மாநில சட்சபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

வரும் நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டமாக ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு பெற்றுவிட்ட நிலையில், இந்தியா கூட்டணி கட்சியில் நேற்று தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டி என்ற விவரங்களை இந்தியா கூட்டணி வெளியிடவில்லை.

ஹேமந்த் சோரன்,

“இந்தியா கூட்டணி தலைவர்கள் தற்போது இங்கு இல்லை. அவர்கள் வந்த பிறகு இது குறித்து அறிவிப்போம்”

என்று தெரிவித்துள்ளார்.