சென்னை: சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் இனி  கியூஆர் கோடு  மூலம் டிக்கெட் எடுக்கும் முறை அறிகப்படுத்தப்பட்டு உள்ளது என சென்னை கோட்டை ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக  கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என ரியில்வே அறிவித்து உள்ளது. தற்போது செயல்பாட்டில்  மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது போல, டிஜிட்டல் முறையில் ரயில் டிக்கெட் எடுக்கும் வகையில், கியூ ஆர் கோடு கட்டணமுறையை சென்னை ரயில்வே கோட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இ துகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எண்ம பரிவா்த்தனைகளை மேம்படுத்தும் விதமாக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு மையம், லக்கேஜ், பாா்சல் சேவை மையம் என அனைத்திலும் கியூஆா் குறியீடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தும் செயல்முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடா்பான சிக்கல்களைத் தவிா்க்கவும், பயணச்சீட்டுகள் விநியோக முறையை எளிதாக்கும் நோக்கத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு மையங்களில் உள்ள கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்த பின்னா் யுபிஐ செயலிகளின் மூலம் பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டு உறுதிசெய்தவுடன் பயணச்சீட்டு வழங்கப்படும். பயணச்சீட்டு மையத்தில் காத்திருப்புக் காலத்தைக் குறைக்கவும், பயணிகளுக்கு ஒரு வசதிகரமான பயணத்தை வழங்கவும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.