சென்னை

வின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட் விற்பனையை குறைக்கவில்லை என விலக்கம் அளித்துள்ளது.

தற்போது ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டின் அளவைக் குறைத்து விலையை உயர்த்தியதாக சர்ச்சை எழுந்தது குறித்து ஆவின் நிர்வாகம்

“ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.   

மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும், பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்.”

என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.