சென்னை

டுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது.

கடந்த 14 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. கடந்த 16 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வானிலை மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி நேற்று கரையை கடந்தது.

இந்நிலையில் அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பகுதி வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரு காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழகத்துக்கு பெரிய மழைக்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வப்போது கனமழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.