சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வேலை செய்து வருகிறது.

ஆற்காடு சாலையில் ஆழ்வார்திருநகர் முதல் போரூர் வரையில் ஒரே ஒரு பேருந்து மட்டும் செல்லும் வகையில் வழி விடப்பட்டுள்ளது.

அதேபோல் மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் போடப்பட்டுள்ள தடுப்புகளால் ராயப்பேட்டை ஹைரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலையில் திரும்ப போதுமான இடைவெளி இன்றி சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் இடைவெளியை குறைத்து வாகனங்கள் செல்ல தேவையான கூடுதல் இடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.

இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.