டெல்லி

த்திய அரசு விரைவில் தக்காளி விலை குறையும் என தெரிவித்துள்ளது..

கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய சமையல் பொருட்களில் ஒன்றான தக்காளியின் விலை சீராக இருந்து வந்தது.  இந்நிலையில், திடீரென நாடு முழுவதும் விலை அதிகரித்தது. சில மாநிலங்களில் விலை 100 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்ததுடன் ஓட்டல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். தென் மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே இது குறித்து,

தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பருவமழை தாக்கம், பயிர் சேதம் மற்றும் பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிக்கபட்டுள்ளதால் விநியோகம் குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் வட மாநிலங்களிலும் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது 100-ஐ தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து விநியோகிக்கப்பட்டு வரும் தக்காளியின் அளவு விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இது டெல்லியில் விலையை கட்டுப்படுத்த உதவும். டெல்லி மற்றும் மும்பையில் ஒரு கிலோ ரூ.65 என்ற மானிய விலையில் அரசு தொடர்ந்து விற்பனை செய்யும். விளைச்சல் அதிகரிப்பதன் மூலம் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

என்று கூறியுள்ளார்.