சென்னை: சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

கனமழையால் கடந்த சில நாட்களாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு அம்மா உணவகங்கள் மூலம்  இரு நாட்கள் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி, நேற்று (16ந்தேதி) ஒரே நாளில் மட்டும்  சென்னையில், 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது என தெரிவித்து உள்ளது.

கூலித்தொழிலாளர்கள், ஏழை மக்களின் வரப்பிரசாதமாகவும், அட்சய பாத்திரமாகவும் அம்மா உணவகங்கள் செயலாற்றி வருகின்றன. சென்னையில் மொத்தம் 407 அம்மா உணவங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் மீது ஆர்வம் காட்டாத நிலையில், பல உணவங்கள் மூடப்பட்டன. இதற்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில்,  முதலமைச்சர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் மேம்படுத்த நிதி ஒதுக்கி உத்தரவிட்டதுடன், மீண்டும்  முழுமையாக செயல்படுத்த அறிவுறுத்தினார். அதன்படி,   சென்னையில் இதுவரை 14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டதால் 393 அம்மா உணவகங்கள்தான் இப்போது செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை கனமழை பெய்தது. குறிப்பாக 13, 14 தேதிகளில் கடுமையான மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.  இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழக்கை பதிக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் அம்மா உணவகங்களில் 16, மற்றும் 17ந்தேதி ஆகிய இரு நாட்களும் விலையில்லாத உணவு 3 வேலைகளிலும் கொடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உணவி தேவை இருப்பவர்கள் அருகில் உள்ள அம்மா உணவகங்களுக்கு சென்றால் விலையில்லா உணவு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் சென்னையில் இருக்க கூடிய அனைத்து அம்மா உணவகங்களில் காலை, மதியம், இரவு என 3 வேலையும் விலை இல்லா உணவு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் நேற்றையதினம் மட்டுமே சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சுமார் 1.08 லட்சம் பேருக்கு விலையில்லாமல் உணவுகள் வழங்கப்பட்டதாக அம்மா உணவகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் இட்லி, பொங்கல் போன்ற சிற்றுண்டியும், மதியம் சாம்பார் சாதம், தயிற் சாதம் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டிருந்தன.  நேற்று காலை மற்றும் மதிய வேலைகளில் 78,557 பேர் உணவருந்தியுள்ளனர். நேற்று இரவு சப்பாத்தி மற்றும் சாம்பார் சாதம் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டது. இதம் மூலம் 29,316 பேர் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.