சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் 9 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்து. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே பரவலாக மழை கொட்டியது. மேலும் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்தது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்று இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும்.

இன்று தாழ்வு மண்டலம்  கரையை கடந்தாலும், தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

வடமாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது”

என்று தெரிவித்துள்ளது,