டெல்லி

பி பயிர்களின் ஆதார விலை மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிஉயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது

மத்திய அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில்,

“விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 50 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது 01.07.2024 முதல் நடைமுறைக்கு வரும்.

அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448.35 கோடி கூடுதல் செலவாகும்.

தவிர 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உயர்த்தி வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.