சென்னை

வெளிநாடுகளில் மட்டும் சிம்பிலி சவுத் ஓடிடியில் வரும் 18 ஆம் தேதி லப்பர் பந்து திரைப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

மேலும் சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ‘லப்பர் பந்து’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற 18-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. ஆயினும் இது இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் மட்டுமே ஓ.டி.டியில் வெளியாகவுள்ளது. இப்படம் இந்தியாவில் எப்பொழுது ஓடிடியில் வரும் என தகவல் வெளியாகவில்லை,