சென்னை

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”* சென்னை சென்டிரலில் இருந்து இன்று (16-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு போடிநாயக்கனூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (20601) ரத்து செய்யப்படுகிறது.

* ஜோலார்பேட்டையில் இருந்து இன்று (16-ந்தேதி) காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16090) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (16-ந்தேதி) மாலை 5.55 புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16089) ரத்து செய்யப்படுகிறது.

* திருப்பதியிலிருந்து இன்று (16-ந்தேதி) காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16204), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16203) ரத்து செய்யப்படுகிறது.

* திருப்பதியில் இருந்து இன்று (16-ந்தேதி) காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16057) ரத்து செய்யப்படுகிறது.

* ஈரோட்டில் இருந்து இன்று (16-ந்தேதி) இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏற்காடு அதிவிரைவு ரயில் (22650) ரத்து செய்யப்படுகிறது.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.